தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிப்பு

உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலைய பகுதியில் பரஞ்ஜோதி அம்மன் கோவில் அருகே மின்சார ரெயில் செல்லும் தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. உடனடியாக ரெயில்வே துறையினர் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்ததால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்த விவரங்கள் உடனடியாக செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் கோட்ட ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்த ரெயில்வே தொழில்நுட்ப பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பழுதை நீக்கினார்கள்.

இதன் காரணமாக காஞ்சீபுரத்தில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் மின்சார ரெயில் சேவை நேற்று மாலை 3.50 முதல் 5.50 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு