தமிழக செய்திகள்

ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மீண்டும் புகுந்த மழை நீர்

ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

தினத்தந்தி

ராமேஸ்வரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனிடையே ராமேசுவரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்து அதிகாலை வரையிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மழையால் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் முழுவதும் மழை நீர் அதிகளவு குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மழை நீரில் மிகவும் கஷ்டப்பட்டு இறங்கி நடந்து சென்று தரிசனம் செய்து செல்கின்றனர்.

ராமேசுவரத்தில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கி நிற்பது தொடர்கின்றது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை