தமிழக செய்திகள்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம் அருகே பேரங்கியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டு சிறை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்