தமிழக செய்திகள்

அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம்...!

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

மதுரை,

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் முற்றிலும் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட அந்தியோதயா வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அனைத்தும் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) புறப்படும் ரெயிலிலும் (வ.எண்.22657), நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயிலில் (வ.எண்.22658) வருகிற 17-ந் தேதி முதல் முன்பதிவு பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்த ரெயிலில் மேற்கண்ட நாட்களில் இருந்து பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை