ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மேல ராஜகுலராமன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சத்திரப்பட்டி பஸ்நிறுத்த பகுதியில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக இரவு நேரங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே உயர்மின் கோபுர விளக்கை சீரமைத்து மீண்டும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.