தமிழக செய்திகள்

தேனி மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

தேனி மாவட்டத்தில் மாநில கூடைபந்து போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.

தினத்தந்தி

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க தேனி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 1-1-2007-க்குப் பின் பிறந்தவர்கள் இதில் பங்கேற்க தகுதியுடையவர்கள். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வயதுச் சான்றுகளுடன் தேர்வு நடக்கும் நாளில் நேரில் வர வேண்டும். இத்தகவலை தேனி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் அஸ்வின் நந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது