தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; முதியவர் போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன்(வயது 54). கூலித்தொழிலாளி. இவர், பள்ளிக்கு சென்று வந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து கலியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு