தமிழக செய்திகள்

சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

கந்தர்வகோட்டையில் சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

கந்தர்வகோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையிலான போலீசார் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

4 பேர் கைது

சோதனையில் சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் செல்வம் (வயது 21), ராஜேந்திரன் மகன் ராஜமோகன் (34), ஹரிகரன் (20), வீரடிப்பட்டியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பரையும் போலீசார் கைது செய்து, சரக்கு வேனுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு