தமிழக செய்திகள்

ரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கனமழை ரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கல்வராயன்மலை மற்றும் அதன் அடிவாரப்பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலைவரை கனமழை பெய்து வந்தது. இதனால் ரங்கப்பனூர், லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் அதிக அளவில் வந்துள்ளது.

ரங்கப்பனூர் பகுதியில் இருந்து புளியங்கோட்டை வரை தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரங்கப்பனூர் பகுதியில் இருந்து லக்கி நாயக்கன்பட்டி செல்லும் ஏரிக்கரை சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர் மழையால் சாலை ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, அந்த பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு