தமிழக செய்திகள்

இருசக்கர வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேக செல்வதே காரணம் என தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT