தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் வினியோகம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அந்த சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

17-ந்தேதி (நாளை) முதல் 21-ந்தேதி வரையிலான நாட்களில் மட்டும் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வினியோகிக்கப்படவேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து அவற்றில் மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து, பிறந்ததேதி, பெற்றோர், பாதுகாவலர் பெயர் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமை ஆசிரியரே அந்த திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு அளித்திடவேண்டும்.

சான்றிதழ்கள் வழங்கப்படும்போது அரசின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு