தமிழக செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியீடு

கோடை விமுறைக்குப் பின் ஜூன் 19-ந்தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியோடு தேர்வுகள் முடிவடையும் நிலையில், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த மாதத்தோடு தேர்வுகள் முடிந்த பிறகு மே 1-ந்தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் எனவும், அதனை தொடந்து ஜூன் 19-ந்தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை, மொத்த வேலை நாட்களோடு கணக்கீடு செய்து அந்தந்த கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு