தமிழக செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூரில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று நடந்தது. இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு கோப்பை, பதக்கம், கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட மேஜை பந்து கழகத்தின் தலைவர் சரவணன், செயலாளர் ராமர், பொருளாளர் ஸ்டான்லி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு