தமிழக செய்திகள்

'கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கள்ளுக்கடைகள் திறப்பதன் மூலம் ஏழை மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ஏழை மக்கள் டாஸ்மாக் கடைகளில் மதுவின் விலை அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆகவே, கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களை காப்பாற்ற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. விவசாயிகளுக்கும் அது பலனளிக்கும். எனவே, கள்ளுக்கடைகளை திறப்பது சாத்தியமா என்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்."

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு