தமிழக செய்திகள்

வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் நிறைவு

வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு அச்சிடும் பணிகளை தமிழகத்தை சேர்ந்த அச்சக நிறுவனங்களுக்கு வழங்காமல், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அச்சக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக சமீபத்தில் புகாரும் எழுந்தன.

இந்நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தமிழகத்தை சேர்ந்த அச்சக நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருப்பதாகவும், அந்த வகையில் 97 அச்சக நிறுவனங்கள் இந்த பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் வரை நிறைவு பெற்று இருக்கிறது என்றும், விரைவில் மீதம் இருக்கும் புத்தகங்களும் அச்சிடப்பட்டு, சரியான நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பாடநூல் கழகம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்