தமிழக செய்திகள்

பாறையில் அடிபட்டு சிறுவன் பலி

வடமதுரை அருகே ஆற்றில் குளித்தபோது பாறையில் அடிபட்டு சிறுவன் பலியானான்.

வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை, தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமுகாளை. இவரது மகன் முனியப்பன் (வயது 17). பால் கறக்கும் வேலை செய்து வந்தான். முனியப்பன், நேற்று மாலை தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள சந்தானவர்தினி ஆற்றில் குளிக்கச் சென்றான். அப்போது முனியப்பன் ஆற்றில் குதித்தபோது அங்கிருந்த பாறையில் அடிபட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்