தமிழக செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் சாமிகும்பிட வந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், பணத்தை பறித்து சென்ற வழக்கில் முருகானந்தம் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முருகானந்தம் மீது இருசக்கர வாகனம் திருடியது, வழிப்பறி செய்தது உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படும் என்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் கமினி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT