தமிழக செய்திகள்

தக்காளி விலை உயர்வு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்தது.

தினத்தந்தி

கிணத்துக்கடவில் காய்கறி சந்தை உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியில் விளையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் பருவமழை சரிவர பொய்யாததால் தக்காளி விளைச்சல் தாமதமாக தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு மொத்தம் 10 டன் தக்காளிகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி 8ரூபாய் 60 பைசாவிற்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் 15 பைசாவிற்கு ஏலம் போனது. இது கடந்த மாதத்தை விட ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் 55 காசு அதிகம் ஆகும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு