தமிழக செய்திகள்

மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதலில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வின்பிரட் ரூபன் (வயது 31). தாம்பரத்தில் தங்கி பள்ளிக்கரணையில் உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் வின்பிரட் ரூபன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வின்பிரட் ரூபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்