தமிழக செய்திகள்

தூத்துக்குடி ஆசிரியர் காலனியில்புதிய குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க கோரிக்கை மனு

தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் புதிய குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க மேயரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கொடுத்த மனுவில், எனது வார்டுக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் அந்த பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் தார்சாலை அமைப்பதற்கு முன்பு புதிதாக போடப்பட்டு உள்ள கருப்பு நிற குடிநீர் குழாயில் தண்ணீர் விட்டு சரிபார்த்தால் கழிவுநீர் வருவதை தடுக்க முடியும். அதே போன்று வீடு வரை புதிய குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஆகையால் புதிய குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை