தமிழக செய்திகள்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வரும் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்வெல் அனுமதிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் கொடுக்கப்பட்ட அனுமதி முடிவடைந்துள்ளதால் புதிய அனுமதி கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது