தமிழக செய்திகள்

பாகலூர் அருகேகுட்டையில் மூழ்கி பெண் சாவு

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள கூஸ்தனப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி ரேணுகா (வயது 40). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் ரமேஷ் ரெட்டி என்பவரது நிலத்தில் பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்த உறவுக்கார சிறுமி சரிகா (9) திடீரென தண்ணீரில் மூழ்கினாள். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா தண்ணீரில் இறங்கி சிறுமியை காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக ரேணுனகா நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு