தமிழக செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது30), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், 1 வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. பாலனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து மனைவி சாரதா 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு நர்ஸ் வேலைக்கு சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாலன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு