* கிரீஸ் நாட்டில் 2008-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி ஏதென்ஸ் நகரில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அலெக்சாண்டிராஸ் என்ற வாலிபர் கொல்லப்பட்டதின் நினைவுநாள் அங்கு நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட பேரணிகளில் வன்முறை வெடித்தது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர்.