தலைப்புச் செய்திகள்

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

மேற்கு வங்காளம் செல்லும் அமித்ஷா தேர்தல் பணிகள் குறித்து கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மத்திய உளதுறை மந்திரி அமித் ஷா வரும் ஜன.30 அன்று மாலை மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து மேற்கு வங்காளத்தின் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வரும் ஜன.31 அன்று நடைபெறும் அரசியல் பேரணியில் அவர் கலந்துகொள்வார் எனவும், பின்னர் அன்று மாலை மீண்டும் டெல்லி திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, மேற்கு வங்காளத்திற்கு கடந்த ஜன.17 அன்று பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை