உலக செய்திகள்

அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கட்டிட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அலாஸ்காவில் கடந்த மாதம் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோப் தீவுப் பகுதிகளில் நிலடுக்கம் ஏறபட்டது. மேலும் கடந்த 2018 நவம்பர் மாதமும் அலாஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்ததது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு