உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் - உலக சுகாதார அமைப்பு கருத்து

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தியவர்களில் ஒருவருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. பரிசோதனையின் போது தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு நபருக்கு எத்தகைய பாதிப்பு என்று விவரிக்க முடியாத ஒரு விளைவு ஏற்பட்டால் அது அந்த மருந்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ கூட இருக்கலாம் என்றும், எனவே அதுபற்றி தீவிரமாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறது.

அத்துடன், மருத்துவ ரீதியிலான பரிசோதனை கட்டத்தில் ஒரு மருந்தின் சோதனையை நிறுத்தி வைப்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு