உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 1,31,319 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர்.

பாரீஸ்,

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பிரான்ஸ் நாட்டின் ஏ.எப்.பி. என்ற சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 3ல் இரு பங்கு மக்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஐரோப்பிய நாடுகளில் 88 ஆயிரத்து 716 பேர் பலியாகி உள்ளனர். இதுவே அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 950 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, இத்தாலி (21,645), ஸ்பெயின் (18,579) மற்றும் பிரான்ஸ் (17,167) ஆகிய நாடுகள் உள்ளன என தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்