உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து 5 லட்சம் அகதிகள் பாகிஸ்தான் வருவார்கள்; நாடாளுமன்றத்தில் குழு அறிக்கை

ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் படையெடுத்த காலம் தொடங்கி தற்போது வரை ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அவர்களை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

தினத்தந்தி

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்தால் 5 லட்சம் அகதிகள் பாகிஸ்தானுக்கு வருவார்கள் என அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஆப்கானிஸ்தான் விவரங்களை கண்காணிக்கும் குழு ஒன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலீபான் பயங்கரவாதிகளின் கை ஓங்கி இருப்பதை சுட்டிக்காட்டி ஆப்கானிஸ்தான் தீவிர உள்நாட்டு போரை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இது பாகிஸ்தானுக்கு நல்லது அல்ல என்றும் பயங்கரவாதத்தின் எழுச்சி மற்றும் ஆப்கானிய அகதிகளின் வருகைக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை