சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே பாகிஸ்தானுக்குள் இந்தியர்களை அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் நினைவு தினம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 22-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஏராளமான இந்திய சீக்கியர்கள் கர்தார்பூர் சென்று வருவது வழக்கம்.
எனவே இதை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் முதல் இந்தியர்கள் கர்தார்பூர் செல்ல அனுமதிப்பது என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 2 டோஸ் தடுப்பூசியும் போட்ட இந்திய பக்தர்கள் பாகிஸ்தான் செல்லலாம். எனினும் விமான கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.