உலக செய்திகள்

லெபனானில் டேங்கர் லாரி வெடித்து 28 பேர் பலி

லெபனான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்ததில் 28 பேர் பலியாகி உள்ளனர்.

பெய்ரூட்,

லெபனான் நாட்டின் வடக்கே அக்கார் பகுதியில் கேசோலின் என்ற எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

லெபனானில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை சிரியாவுக்கு கடத்தப்படுகின்றன. அதேபோல், கடத்தி வரப்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை லெபனான் ராணுவம் பறிமுதல் செய்து, லெய்ல் கிராமத்தில் நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்தது. இதில் 28 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 79 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு