உலக செய்திகள்

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

அக்டோபர் 11 ஆண்டு தோறும் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

லகெங்கிலும் உள்ள இளம் பெண்களின் குரல்களை வலுப்படுத்தவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சர்வதேச பெண்கள் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கனடாவால் ஒரு தீர்மானமாக முதலில் முன்மொழியப்பட்டது. டிசம்பர் 19, 2011 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அக்டோபர் 11, 2012 ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றியது.

ஆண்டு தோறும் குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் கருப்பொருள் 'டிஜிட்டல் தலைமுறை'. பெண்கள் டிஜிட்டல் தளத்தின் யதார்த்தங்களையும், அதில் தங்களது கருத்து சுதந்திரம் மற்றும் எல்லையற்ற ஆற்றலுக்கான தொழில்நுட்ப வல்லுநர்களாக பல்வேறு வழிகளில் சிறந்து விளங்கத் தேவையான தீர்வுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு