ஆன்மிகம்

எம தர்மனின் வேண்டுகோளை நிறைவேற்றிய அம்பிகை

மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான்.

மார்க்கண்டேயனின் உயிரைக் கவர எம தர்மன் சென்றபோது, அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொள்கிறான். அப்போது எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீதும் விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை காலால் உதைத்து தண்டித்ததுடன், மார்க்கண்டேயனுக்கு 'எப்போதுமே பதினாறு வயதுதான்' என்றும் அருள்புரிந்தார்.

சிவபெருமான் இவ்வாறு கோபத்தில் காலனை காலால் உதைத்த சம்பவத்திற்கு பின்னால், ஒரு உட்பொருள் இருக்கிறது.

நீதி, நேர்மை தவறாமல் சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும் தவம் செய்தார், எமதர்மன். அப்போது அவர் முன்பாக தோன்றிய அம்பிகையிடம், "தாயே! தங்கள் திருவடி, என் மார்பின் மீது பட வேண்டும்" என்று வேண்டினார். "தக்க சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்" என்று அருளாசி கூறி மறைந்தாள் அம்பிகை.

மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான். அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் ஈசனின் இடப்பாகம் ஆதிபராசக்தி என்ற நிலையில், சிவனின் இடது கால் பகுதி அன்னையின் திருவடியாகவே பார்க்கப்படுகிறது. எனவே எமதர்மனின் விருப்பப்படி, அம்பிகையின் திருவடி அவரது மார்பில் பதிந்தது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு