ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு,

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சாமி கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மீது அமைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 4 நாட்களாக விடப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக, நேற்று பெருமளவில் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்தனர்.

திரளான பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்ததன் காரணமாக கோவில் ஊழியர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம் செய்ய ரூ.150 கட்டணம் செலுத்தி சென்ற பக்தர்கள், சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக காலையில் மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர், அவருக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் ஜரிகை அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது