ஆன்மிகம்

திருச்சானூரில் 27-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள்

கோவில் முக மண்டபத்தில் நடைபெறும் விழாவில், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

தினத்தந்தி

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோவிலில் உள்ளது. ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலை ஒட்டி இந்த உபகோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 27-ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில் முக மண்டபத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலையில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள் (ஆகஸ்டு 28) உறியடி உற்சவம் நடைபெறுகிறது. 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை