ஆன்மிகம்

பிரார்த்தனைகள் நிறைவேற... எந்த விநாயகரை எப்படி வழிபடவேண்டும்?

ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும்.

தினத்தந்தி

வில்வமரம் விநாயகர்- தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் வில்வமர விநாயகரை சித்திரை நட்சத்திரத்தன்று வழிபட்டால் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

அரசமர விநாயகர்- அரசமரத்தடியில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை பூச நட்சத்திர தினத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பண கஷ்டங்கள் நீங்கும். பயிர்விளைச்சல் அதிகரிக்கும்.

ஆலமர விநாயகர்- ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும். பிறகு அந்த சாதங்களை கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால் தீராத கடுமையான நோய்கள் குணமடையும்.

வேப்பமர விநாயகர்- வேப்பமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று ஐந்து வகை எண்ணெய் தீ தீபம் ஏற்றி ஏற்றி வழிபட்டால் விருப்பத்துக்கு ஏற்ப நல்ல வாழ்க்கை துணை அமையும்.

மாமரத்து விநாயகர்- மாமரத்தடியில் இருக்கும் விநாயகரை கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பீட்டு வணங்கி பெண்களுக்கு ஏதாவது தானம் செய்தால் வியாபாரம் செழிப்படையும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

புன்னைமர விநாயகர்- ஆயில்யம் நட்சத்திரத்தன்று புன்னைமர விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஏழை மற்றும் நோயாளிகளுக்கு தானம் செய்வதும் சிறந்தது.

மகிழமர விநாயகர்- மகிழமர விநாயகரை அனுஷம் நட்சத்திர தினத்தன்று வழிபட்டு மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் பில்லி-சூனியம், செய்வினை, திருஷ்டிகள் விலகும்.

வன்னிமர விநாயகர்- அவிட்டம் நட்சத்திரத்தினத்தன்று நெல் பொரியால் வன்னிமர விநாயகரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு