ஆன்மிகம்

அமாவாசை சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புகழூர் நகராட்சி மகாமாரியம்மன், நானப்பரப்பு மாரியம்மன், தளவாபாளையம் மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில், குளத்துப்பாளையம் தங்காள் அம்மன், நொய்யல் முனியப்பசாமி கோவில், முனிநாதபுரம் மகாமுனிஸ்வரர் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், உப்புப்பாளையம் மாரியம்மன், புன்னம் மாரியம்மன், பேரூர் அம்மன், திருக்காடுதுறை மாரியம்மன், மாதேஸ்வரி அம்பிகை கோவில் தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் மற்றும் குலதெய்வ கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு