ஆன்மிகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: இன்று தொடங்குகிறது

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ராமேசுவரம்,

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு அதில் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணி அளவில் ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஏற்றுகின்றனர். தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி சிலுவை பாதை திருப்பலி நடைபெறும். இரவு 8 மணி அளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை இலங்கை கடற்படை மற்றும் இருநாட்டு பக்தர்களும் சேர்ந்து தோளில் சுமந்து, ஆலயத்தை சுற்றிவரும் தேர் பவனி நடக்கிறது.

நாளை காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி நடக்கிறது.கச்சத்தீவு ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து 78 விசைப்படகுகளும், 23 நாட்டுப்படகுகளும் சல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 3,424 பேர் பதிவு செய்துள்ளனர். இன்று காலை 6 மணியில் இருந்து போலீசாரின் சோதனைக்கு பின்னர் ஒவ்வொரு படகாக வரிசை எண் அடிப்படையில் கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றன.

திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்