ஆன்மிகம்

ராஜாளிக்காடு அங்காளம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

உலக நன்மை வேண்டியும், நன்றாக மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் லட்சார்ச்சனை நடைபெற்றது.

வேதாரண்யம் அடுத்த ராஜாளிக்காட்டில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி ஆலயம். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 20-வது ஆண்டு லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், நன்றாக மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் நடைபெற்ற லட்சார்ச்சனையில், ஏராளமானோர் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து அங்காளம்மனை வழிபட்டனர்.

லட்சார்ச்சனையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு அன்ன வாகனத்தில் அங்காளம்மன் எழுந்தருளி, கோவிலை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு