ஆன்மிகம்

பங்குனி உத்திர திருவிழா: திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று வாகனங்கள் செல்லதடை

நேற்று மாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகன் மலைக் கோவிலில் குவிந்தனர்.

தினத்தந்தி

திருத்தணி,

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். எனவே விடியற்காலை 3 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களின் வாகனங்களால் மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வாகனங்கள் மலைகோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்க நேற்று மாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகன் மலைக் கோவிலில் குவிந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை