ஆன்மிகம்

பவித்ரோற்சவம்: சீனிவாசமங்காபுரம் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

மாலையில் சுவாமியும், அம்மாவாளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினத்தந்தி

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது.

இதையொட்டி பவித்ர மாலைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த மாலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவர், உற்சவர், விமான பிரகாரம், கொடி மரம் மற்றும் பலிபீடத்துக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதுதவிர உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னாபன திருமஞ்சனமும் செய்யப்பட்டது.

மாலையில் சுவாமியும், அம்மாவாளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள் வரலட்சுமி, கோபிநாத், ரமேஷ், கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை