ஆன்மிகம்

சஷ்டி விரத தினம்: சென்னிமலை முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.

தினத்தந்தி

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். அவ்வகையில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி திதி இரண்டும் இணைந்து வந்ததால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் மலைக் கோவிலில் திரண்டனர்.

காலையில் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு ஊர்களிலிருந்து காவடி எடுத்து பொதுமக்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் பஸ் இயக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு