ஆன்மிகம்

அக்டோபர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 7-ந்தேதி பௌர்ணமி கருடசேவை நடைபெறுகிறது.

தினத்தந்தி

திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்தில் (அக்டோபர் 2025) நடைபெற உள்ள சிறப்பு விழாக்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

அக்டோபர் 1-ந்தேதி (நாளை, செவ்வாய்க்கிழமை) பிரம்மோற்சவ விழா தேரோட்டம், 2-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம், 3-ந்தேதி பாக் சவாரி உற்சவம், 7-ந்தேதி பவுர்ணமி கருடசேவை, 15-ந்தேதி திருமலை நம்பி உற்சவம் தொடக்கம், 20-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்.

23-ந்தேதி பகினீஹஸ்த போஜனம், 24-ந்தேதி திருமலைநம்பி சாத்துமுறை, 25-ந்தேதி நாகுல சதுர்த்தி, அதையொட்டி பெரிய சேஷ வாகன வீதிஉலா, 27-ந்தேதி மாணவாள மாமுனிகள் சாத்துமுறை, 28-ந்தேதி சேனை முதலியார் வருட திருநட்சத்திரம், 29-ந்தேதி மாலை புஷ்ப யாக மகோற்சவ அங்குரார்ப்பணம், 30-ந்தேதி புஷ்ப யாகம், 31-ந்தேதி பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், யாஜ்ஞவல்க்ய ஜெயந்தி நடக்கிறது.

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு