ஆன்மிகம்

வேதாரண்யம் அருகே சிவலிங்கம் மீது சூரிய ஒளி.. அற்புத காட்சியை தரிசனம் செய்த பக்தர்கள்

சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேல மறைக்காடர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானுக்கு ருத்ர யாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி இக்கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெறும்.

இந்த ஆலயத்தில் இன்று காலை 6 மணியளவில் இக்கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டது. சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை வழிபட்ட நிகழ்வு சுமார் பத்து நிமிடம் நீடித்தது. சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்பு சிவலிங்கத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் என பக்தர்கள் தெரிவித்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை