ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

தினத்தந்தி

திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூலானது, சைவ நெறிகளுக்கு நிகராக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூல், 3 ஆயிரம் பாடல்களால் ஆனது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உணர்வுடையார்கட்கு உலகமும் தோன்றும்

உணர்வுடையார்கட்கு உறுதுயர் இல்லை

உணர்வுடையார்கள் உணர்ந்த அக்காலம்

உணர்வுடையார்கள் உணர்ந்து கண்டாரே.

விளக்கம்:- இறை உணர்வு பெற்றவர்களுக்கு இந்த உலகத்தின் உண்மையான காட்சி தோன்றும். அது மாயையில் இருந்து நீங்கிய காட்சியாகும். அப்படிப்பட்டவர்

களுக்கு துயர் எதுவும் வராது. இறை உணர்வு பெற்ற அந்த நொடியிலேயே, இறைவன், உயிர், தளை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய உணர்வு அவர்களுக்கு கைவரப் பெறும்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை