ஆன்மிகம்

தீர்த்தவாரி உற்சவம்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் நரசிம்மர் காவிலில் புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் தெப்பக்குளத்திற்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலசத்தில் வருண ஜெபம் தொடர்ந்து பெருமாளுக்கு தெப்பக்குளத்தில் வைத்து விசேஷ அபிஷேகம், உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலையும், தெப்பக்குளத்தையும் பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதலும் நடந்தது. மாலையில் சாமி கோவிலையும், தெப்பக்குளத்தையும் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தவலம் வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார், செயல் அலுவலர் இரா.முருகன் தலைமையில் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு