ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.

தினத்தந்தி

இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

பாடல்:-

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்

துதியது செய்து சுழியுற நோக்கில்

விதியது தன்னையும் வென்றிட லாகும்

மதி மலராள் சொன்ன மண்டலம் மூன்றே.

விளக்கம்:- ஒன்றிலும் உறுதித் தன்மையோடு இருக்காமல், அதுவா.. இதுவா என்று தடுமாறும் நிலையை நீக்க வேண்டும். நம்முடைய எண்ணமானது, ஓரிடத்தில் நிலை பெற்றிருக்கும் வகையில் சக்தியை வணங்கினால் விதியைக் கூட வெல்லலாம். அமுதம் பொழியும் அந்த அன்னையானவள், வணங்கும் வகையில் கூறியருளிய மூன்று மண்டலங்கள், அக்னி, சந்திரன், சூரியன் ஆகியவை ஆகும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது