ஆன்மிகம்

யுகாதி ஆஸ்தானம்: திருப்பதியில் தரிசன முறையில் மாற்றம்

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 25-ம் தேதி நடைபெறும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி:

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான ஸ்ரீ விஷ்வவசு நாம தெலுங்கு யுகாதி பண்டிகை கெண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மார்ச் 25-ம் தேதி கேவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. பாரம்பரிய முறைப்படி கேவிலை சுத்தம் செய்யும் நடைமுறைக்காக அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான 4 மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே பேல் யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு மார்ச் 30-ம் தேதி, சகஸ்ர தீபஅலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனத்திற்கு விஐபி புரேட்டேகால் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் விஐபி தரிசனத்திற்காக எந்த பரிந்துரை கடிதமும் ஏற்றுக் கெள்ளப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கூறி உள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கெண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கெண்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்