புதுடெல்லி,
முன்னதாக கடைசி ஓவரின் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது நோ-பால் என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் நோ-பால் இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து நோ-பாலை ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். டோனியின் இந்த செயலை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பிஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சித்தனர். இது குறித்து விசாரித்த ஐ.பி.எல். அமைப்பு டோனிக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்தது.