கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி ஹசின் ஜஹன் கடந்த மாதம் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்கும் கொல்கத்தா போலீசார் இன்று பிற்பகலுக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் ஐ.பி.எல்.-ல் விளையாடி வருவதால் குறிப்பிட்ட தேதிக்குள் தன்னால் ஆஜராக இயலாது என்று வக்கீல்கள் மூலம் போலீசுக்கு தெரிவிக்க ஷமி முடிவு செய்துள்ளார்.